இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

அன்னாளின் ஜெபம்

*அன்னாள் ஜெபத்தில் காணப்பட்ட மேன்மையான காரியங்கள் :*
________________________

*1)* தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் -

தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29

*2)* கர்த்தரை துதித்தாள் - சேனைகளின் கர்த்தாவே  என்கிறாள் (பிலி 4:6)


*3)* வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (தேவை ஒன்றுதான்)→

 கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47)

*4)* கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் →

 எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5)

*5)* இருதயத்தில் பேசினாள் → சங்கீதம் 4:4

*6)* அமைதியாக ஜெபித்தாள் (உதடுகள் மாத்திரம் அசைந்து) →

சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்

*7)* பொருத்தனை பண்ணி ஜெபித்தாள் → சங் 50:13,15

*8)* சுய நலமில்லாமல் ஜெபித்தாள் →

ஒரே ஒரு ஆண்மகனை கேட்டாள். அவனையும் கர்த்தருக்கென்றே கேட்டாள். (யாக் 4:3)

*9)* குறிப்பிட்டு ஜெபித்தாள் (ஆண் மகனை தாரும்)

*10)* தாழ்மை காணபட்டது →

 சிறுமையை கண்நோக்கி பாரும் (சங் 138:6)

*11)* தன் காரியத்தை மட்டும் கூறினாள் →

பெனினாள் வாயை அடையும். அவளுக்கு முன்பாக என்னை உயர்த்தும் என்று ஜெபிக்க வில்லை.

*12)* இருதயத்தை உற்றி ஜெபித்தாள் →

ஜெபத்தில் இருதயம் நொருங்க வேண்டும் (சங் 62:8) (சங் 51:17)

*13)* ஊழியக்காரரை கனம் பண்ணினாள் →

நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு 'அப்படியல்ல ஆண்டவனே" என்று மிகத் தாழ்மையுடன் கூறினாள். ஏலி செய்தது தவறுதான். அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்

*14)* விசுவாசத்தோடு ஜெபித்தாள் →

 அப்புறம் அவள் துக்கமுகமாய் இருக்க வில்லை (ஜெபம் கேட்கபட்டது என்ற விசுவாசம் இருந்தபடியால் சந்தோஷமாக எழுந்து போனாள்) வச.18. ஜெபித்த பின்பு போஜனம்  செய்தாள்.(மாற் 11:24)


*குறிப்பு :*

அன்னாள் ஜெபித்தது ஒரே முறை.
ஒரே ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும்.

🙏🏻🎀🙏🏻

Post a Comment

0 Comments