இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இரத்த சாட்சிகள்.....தேவ சகாயம் பிள்ளை

இரத்த சாட்சிகளின் கதறல்

தேவ சகாயம் பிள்ளை
காற்றாடி மலை. இது தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழி என்ற இடத்தில் அமைந்துள்ளது நாள்தோறும் அவ்விடத்தை தரிசனம் செய்வோர் அனேகர்
அவ்விடத்தில் அப்படி என்றத்தான் சிறப்பு வியக்கும் காட்சிகள் அண்டியவர்கள் அதிசைக்கும் செய்சிகள் ஆம் இந்தியாவில் புனித தோமா வுக்கு பிறகு இரத்த சாட்சியான தேவ சாட்சி தேவசகாயம் பிள்ளை தன் உடலைக் கிறிஸ்துவுக்குக் காணிக்கையாக கொடுத்த இடம் தேவசகாயம் பிள்ளை வைதீக இந்து குடும்பத்தில் பிறந்தார்
சாஸ்திரங்களின் முறைப்படி வளக்கப்பட்டார்  தம் 28 ஆம் வயதில் அரசு அதிகாரியாக மன்னரால் நியமிக்கப்பட்டார் மன்னரின் தலைமைத் தளபதியான டினலாய் மூலம் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி அறிந்துக்கொண்டார் அன்று முதல் கிறிஸ்துவின் தொண்டரானார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மதம் மாறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார் .கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பலமுறை எச்சரிக்கப்பட்டார். ஆனால் தேவசகாயம் பிள்ளையோ கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகுவதில்லை என மன உறுதியுடன் காணப்பட்டார்❤
மூன்று ஆண்டுகள் கடும் சித்திரவதைக்குள் தள்ளப்பட்டார்.சிறைவாசத்துக்குள் தள்ளப்பட்டார்🏢 எருமை மாட்டின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போகப்பட்டார்🐃சூரை முள் கொண்டு அடிக்கப்பட்டார்🌵 சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளானார்.
எத்தனையோ கொடுமைகள், ஆனால் தேவ சகாயம் பிள்ளையின் விசுவாசத்தை அவர்களால் அசைக்க முடியவில்லை. இறுதியில் 1752ம் ஆண்டு ஜனவரி 14ல் போர்ச் வீரர்களின் குண்டுகளுக்கு பலியாகி பலரின் விசுவாசத்தை உயிர்பெற செய்தார்.இன்றும் காற்றாடி மலை அவர் புகளை அனைவருக்கும் பறைசாற்றுகின்றது⛳
மண்ணில்:23-04-1712
விண்ணில்:14-01-1752
ஊர் :பத்மநாபபுரம்
நாடு : இந்தியா
தரிசன பூமி: இந்தியா
இயேசுவின் மேல் கொண்ட உன்னதமான நம்பிக்கையின்
வீரனாக அவருக்காக மடிய நான் தயார்.

   -தேவசயாயம் பிள்ளை.

Post a Comment

0 Comments