இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ஜெபம் - 3 இயேசுவின் பாதபடியில்

ஜெபிப்பது என்பது என்னுடன் உரையாடுவதுதான். அவ்வாறு என்னுடன் ஐக்கியமாகவும் நெருங்கியும் இருப்பது எனது சாயலை தருகின்றது. ஒரு வகை பூச்சி பசுமையான இலைகளை உண்டு அவற்றுக்குள் வாழ்வதால் பச்சை நிறமாக மாறுகின்றது. பனிப்பிரதேசத்தில் வாழும் துருவ கரடிக்கு பனிக்கட்டி போன்ற வெண்மை நிறம் கிடைக்கிறது. வங்காள காடுகளில் வாழும் புலியின் தோலின்மேல் அங்குள்ள நாணல் செடிகளின் அடையாளம்போல் காணப்படுகின்றது. அதைப் போன்றே ஜெபத்தின் யாக என்னுடன் இணைந்து வாழ்பவர்கள் எனது சாயலில் உருவாக்கப் படுகின்றனர்


2. ஒரு சிறிதளவு நேரமே பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் என்னுடன் ஐக்கியப்பட அந்த மலையின் மேல் அழைத்துச் சென்றேன். நான் மாருபமான பொழுது என்னுடன் மோசேயும் எலியாவும் அவர்களுக்கு காணப்பட்டார்கள். அந்த பரம மகிமையின் சிறிதளவு தரிசனத்தால் அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டார்கள். மூன்று கூடாரங்களை அமைத்துநாம் இங்கேயே வாழ்ந்துவிடலாம் என்றனர் (மத்.17:1-5). என்னுடன் நிலைத்திருந்த பரிசுத்தவான் களுடனும் எண்ணற்ற தூதர்களுடனும் மாறாத எனது முழுமையான தரிசனத்தை காணும் மகிமை எவ்வளவு அற்புதமானதாகவும் ஆனந்தமாகவும் விளங்கும்! யோவா.17:24; பாக்.117 ஜெபிக்கும் ஒரு மனிதன் ஒரு போதும் தனிமையாக இருப்பதில்லை . என்னுடனும் சகல பரிசுத்தவான் களுடனும் ஐக்கியம் கொள்கிறான் (மத்.28:20; சகரி,3:7-8),


காட்டு மிருகங்களை அடக்கி பழக்கப்படுதி பயன்படுத்துவதும் மின்னல், காற்று, வெளிச்சம் ஆகிய இயற்கை சக்திகளை மேற்கொள்வலும் உலகத்தையும் சாத்தானையும் அதன் ஆசை இச்சைகளையும் எதிர்த்து மேற்கொள்வதுதான் மிக உண்மையான தேவை. ஜெபமே வாழ்வாக கொள்ளும் மனிதர்களுக்கு சத்துருவின் எல்லா வல்லமையையும் மேற்கொண்டு ஜெயம் பெற நான் பலன் தருகின்றேன். (லூக் 10:17,20) அவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நிலைத்திருப்பதால் உன்னதங்களில் வாசம் செய்கிறார்கள் (எபே.2:6). என்னில் சாத்தான் கீழே இருக்கிறான், அவர்கள் உன்னத உயரத்தில் உள்ளனர். அவனால் அவர்களை நெருங்க முடியாது. அவர்கள் என்னில் நிலைத்திருப்பதால் பாதுகாப்புடன் ஒரு பயமும் நடுக்கமுமின்றி வாழ்வார்கள்


மனிதர்கள் இயற்கை சக்திகளை மேற்கொண்டாலும் அவர்கள் பானத்தின் எல்லைகளுக்கு மேல் செல்லமுடியாது. ஆனால் ஜெபம் செய்யும் ஒரு மனிதன் சாத்தானையும் சுயத்தையும் மேற்கொள்கிறான். நித்திய பரலோகத்தை மனக்கண்களால் காண்கிறான்


4.மலர்களிலிருந்து தேனை எடுக்கும் தேனியானது மலரின் நிறத்தையோ மனத்தையோ நீக்குவதில்லை, அதைப்போன்றே ஜெரிக்குட ஓர் மனிதன் தேவனுடைய சிருஷ்டிப்பிலிருந்து நன்மையையும் மகிழ்ச்சியையும் சேர்க்கின்றான், பல இடங்களில் உள்ள விதவிதமான மலர்களிலிருந்து தேனிக்கள் தேன் எடுப்பதுபோல தேவ மனிதன் இனிமையாக எண்ணங்களையும் உறவுகளையும் சிருஷ்டிப்பிலிருந்து கண்டு தன்னை உருவாக்கின கர்த்தரின் ஐக்கியத்தால் தன் இருதயத்தில் சத்தியமாகிய தேனை சேர்க்கின்றான். எல்லாவற்றிலும் எல்லா நேரங்களிலும் அவருடன் சமாதானமாக இருப்பதால் இனிய தேனாக தேவனை ருசித்து மகிழ்கின்றான்.


நமது இருதயங்களில் பரிகத்த ஆவியானவராகிய எண்ணையை பெற்று காத்துக்கொள்வது இன்றைய தேவை. அந்த ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் போல, (மத் 25:1-13) அல்லவென்றால் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் போல வருத்தத்தையும் சஞ்சலத்தையும் காண நேரிடும், இப்பொழுதே நீங்கள் பரம சத்திய ஓய்வு நாருக்கான மன்னாவையும் சேர்த்து வைக்கவேண்டும். இல்லையெனில் துயரமும் துக்கமும் நேரிடும் (யாத் 16:15,27).


நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் (மத்.24:20) அது நித்திய இளைப்பாறுதலுக்கான ஆயிரம் வரும் ஆட்சி இதுவரை


சம்பலித்திராதது


தட்ப வெப்ப சூழ்நிலையானது செடிகளின் வளர்ச்சியிலும், மலர்களின் நிறங்களிலும், அமைப்பிலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதுபோல என்னுடன் தொடர்ந்து ஐக்கிய உறவு கொள்பவர்கள் யாவரும் ஆவிக்குரிய தன்மையில் வளர்ச்சி பெற்று தங்கள் பழக்கங்கள், உருவம், நடை உடை பாவனைகள் எல்லாவற்றிலும் மாறுதல் அடைவார்கள். பழைய மனிதனை களைந்துவிட்டு என்னுடைய மகிமையுள்ள தூய்மையான சாயலில் மறுரூபடைவார்கள்


அந்த விபசார ஸ்திரீயை தண்டிப்பதற்காக கொண்டு வந்த மக்களின் மனதில் உள்ள தீமையான நிலைபற்றி எனது விரலினால் தரையில் எழுதினேன். அதனால் அவர்கள் வெட்கமடைந்து ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று விட்டார் கள், என்னுடைய விரலினால் எனது நாழியத்தின் பாவ காயங்களை இரகசியமாக கட்டிக் காட்டுகின்றேன். அவர்கள் மனந்திரும்பினால், அதே விரலினால் அவர்களை தொட்டு தக்கின்றேன். ஒரு சிறு குழந்தை தன் தந்தையின் விரல்களை தன் செயால் பிடித்துக்கொண்டு அவருடன் நடப்பது போல நானும் எனது காளைகளை இவ்வுலகிலிருந்து இளைப்பாறுதலின் வீட்டிற்கும், நித்திய கானத்துக்கும் எனது விரல்களால் பிடித்து வழி நடத்தி செய்கிறேன் போவா.1,2,3).


1. சில வேளைகளில் மனிதர்கள் என் நாமத்தினால் பிதாவிடம் ஜெபம் செய்கின்றனர். ஆனால் என்னில் நிலைத்திருப்பதில்லை. எனது பெயர் அவர்கள் வாயிலும் உதடுகளிலும் உள்ளது. ஆனால் அவர்கள் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் இல்லை. தாங்கள் கேட்டதை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. ஆனால் நான் அவர்களிலும் அவர்கள் என்னிலும் நிலைத்திருக்கும்பொழுது அவர்கள் பிதாவினிடத்தில் கேட்டு வேண்டிக்கொள்வதை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் மரித்த ஆவியானவரது நடத்துதலினால் அவர் காட்டும் வழியில் ஜெபிக்கின்றனர், பரிசுத்த ஆவியானவர் பரமபிதாவுக்கு மகிமைகொண்டு வரவும் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் சிறந்ததாகவும் உள்ளதை காட்டுகின்றார். அல்லது, ஒரு கெட்ட மகன் ஒரு ஆளுநரிடமிருந்து பெற்ற பதிலை பெறுவார்கள். அந்த கெட்ட மகனுடைய தந்தை அந்த ஆளுநரிடம் மிகவும் வீரமும் நன்னடத்தையும் உள்ளவராக பணிபுரிந்திருந்தார். ஒரு வேலைக்காகவும் சலுகைக்காகவும் தனது தந்தையின் பெயரால் அந்த மகன் 95 விண்ணப்பம் கொடுத்தபொழுது, ஆளுநர் அவனது தீமையான வாழ்க்கையையும், தீய பழக்கங்களையும் கட்டிக்காண்பித்து கூறினார் உன்னுடைய தந்தையின் பெயரால் என்னிடம் வேண்டுகோள் காவேண்டாம். நீ முதலில் திரும்பி சென்று அவருடைய நல்ல மாதிரியான வாழ்க்கையை பின்பற்று. அவருடைய உயர்ந்த தகுதி உளது உதடுகளிலல்ல, உனது வாழ்வில் காணப்படட்டும், அப்பொழுதுதான் உனது விண்ணப்பம் அக்கரிக்கப்படும்.)


8.தங்கள் உதடுகளால் மட்டும் என்னை ஆராதித்து துதிப்பவர்களுக்கும் தங்கள் உள்ளத்திலிருந்து துதிப்பவர்களுக்கும் இடைய ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக உண்மையாக தொழுது கொள்ளும் ஒரு நபர் மற்ற ஒரு மனிதனுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு அவரும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என தொடர்ந்து ஜெபித்து வந்தார். அந்த மற்ற மனிதளோ பெயருக்கு என்னை தொழுபவனாக இருந்தாள். அவன் இந்த உண்மை விசுவாசிமேல் பகைமை உடையவனாக அடிக்கடி அவன் குருடாக ஆகிவிடவேண்டும் என ஜெபம் செய்தான். முடிவில் தேவனடைய அன்பான சித்தத்தின்படி அந்த உண்மையாய் தொழுது கொள்ளும் நபரின் ஜெபம் கேட்கப்பட்டது. மாய்மாலக்காரனாக இருந்த அந்த மற்றொரு மனிதன் ஆவிக்குரிய பார்வையை பெற்றாள், மிகுந்த மனமகிழ்வுடன் உண்மை விசுவாசியாக மாறினான். என்னை உண்மையாய் தொழுதுவந்த விசுவாசிக்கு மிக அன்பான சகோதரனாகி ஆகிவிட்டான்


ஜெபம் பல வழிகளிலும் இயலாத ஒன்றை மனிதர்களுக்கு வாய்க்க செய்கின்றது. உலக ஞானத்தாலும் கருத்துகளாலும் முற்றிலும் இயலாது என கருதப்படுபவற்றை ஜெயமானது அவர்களை அற்புதமாக வாழ்வில் அனுபவிக்கச் செய்கின்றது. விஞ்ஞான அறிவு பொருந்திய மனிதர்கள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து நடத்திவிடும் தேவன் தமது இயற்கை சிருஷ்டியின் விதிகளால் கட்டப்பட கூடாத அளவு மகிமையுள்ளவர் என்பதை அறிந்து கொள்வதில்லை. எல்லா சட்டதிட்டங்களையும் அமைத்தவருடைய வழிகள் அளவிடப் படாதவைகள், கற்பனைக்கு எட்டாதவைகள். அவரது நித்திய சித்தமும் நோக்கமும் அவரது சிருஷ்டிகளை ஆசீர்வதிப்பதுதான். ஆனால் சுபாவ மனிதர்கள் அதனை அறிந்துகொள்ள முடியவில்லை ஏனெனில் ஆவிக்குரியவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படும் (1 கொரி.2:14),


எல்லாவற்றையும் விட பெரிய அற்புதம் மனிதனின் மறுபடியும் பிறக்கும் அனுபவமே, இந்த அற்புதத்தை அனுபவத்தில் அறிந்த மனிதனுக்கு எல்லாம் சாத்தியமானவை. இப்பொழுது குளிர் பிரதேசங்களில் தண்ணீரால் அமைந்த பாலம் என்பது சாதாரண காட்சி, ஏனெனில் ஆற்றின் மேல்பகுதி கடினமாக உறைந்து பனிக்கட்டியாகிவிடுகிறது. தண்ணீர் கீழே இன்னும் ஒடிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் அந்த பனிக்கட்டி பாலத்தின் மேல் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நடந்து ஆற்றை கடந்து செல்கின்றனர் ஆனால் இப்படி ஒரு பாலம் இருப்பதை எப்பொழுதும் வியர்வையிலும் உஷ்ணத்திலும் வாழும் வெப்ப நாட்டில் உள்ளவர்களிடம் கூறினால் அப்படிப்பட்ட ஒன்று இருக்கவே இயலாது அது இயற்கைவிதிக்கு எதிரானது என கருதுவார்கள். மறுபடியும் பிறந்து ஜெபம் செய்வதனால் ஆவிக்குரிய வாழ்வை கடைப்பிடித்து வாழ்பவருக்கும், உலகப் பிரகாரமாக பொருட்களையே முக்கியமாக வாழ்பவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் ஆத்தும வாழ்வை அறியாமல் இருக்கின்றனர்


10. தேவனிடத்திலிருந்து ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்தை பெற விரும்பும் ஒருவர் விசுவாசித்து கீழ்படிய வேண்டும். சூம்பின கையுடைய ஒரு மனிதன் என்னிடம் வந்தபொழுது, அவனது கையை நீட்ட சொன்ன பொழுது உடனே கீழ்ப்படிந்தான். அவனது கை மற்ற கைபோல முழுவதும் சுகமாயிற்று (மத்.12:10-13). ஒரு வேளை உடனே கீழ்ப்படியாமல் அவன் விவாதிக்க துவங்கி “எப்படி நான் என் கையை நீட்ட முடியும்? எனக்கு அதை செய்யமுடிந்தால் நான் ஏன் உம்மிடம் வரவேண்டும்? முதலில் என் கையை கமாக்குங்கள், அப்பொழுதுதான் எனக்கு அதனை நீட்டமுடியும்" என கூறியிருந்தால் அது சரியான காரணமாக தெரியலாம். ஆனால் அவனது கை சுகமடைந்திருக்காது


ஜெபிக்கும் ஒருவன் விசுவாசமும் கீழ்ப்படிதலும் உள்ளவராக இருக்கவேண்டும். தனது பலவினமான சூம்பிய கைகளை என்னிடத்தில் ஜெபத்தில் ஏறெடுத்து காட்டவேண்டும். நான் அவனுக்கு ஆவிக்குரிய வாழ்வை தந்தருளுவேன். அவனவனுக்குரிய தேவைக்குத்தக்கதாக அவனுக்கு தரப்படும் (மத்.21:22).


Post a Comment

0 Comments