இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

மகிமை அடைந்தவர்களின் பேரானந்தம் பகுதி 1 (The Rapture Of The Glorified)

மகிமை அடைந்தவர்களின் பேரானந்தம்!

பகுதி 1


இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை வெளிப் 7:16


பரலோகத்தைக் குறித்து நாம் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பதில்லை. இது. உலகவாழ்க்கையின் மிகப்பெரும் சாபம். உலகவாழ்க்கையில் நம்மைக் கட்டியிருக்கின்றதான கயிறுகளை அவிழ்த்து நாம் விடுதலை பெற வேண்டுமானால். பரலோகத்தோடு நமக்கு இருக்கின்ற இணைப்பை அதிகமாக வலுப்படுத்திக் கொண்டால்தான் முடியும். வரப்போகின்ற உலகத்தைக் குறித்து நீங்கள் அதிகமாக சிந்திப்பீர்களானால், இந்த உலகத்தைக் குறித்த உங்கள் சிந்தனையானது குறைந்து போகும். மேலோகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதால், நாம் இவ்வுலகில் நஷ்டம் அடைந்ததாக நினைக்கிற காரியங்களிலிருந்துகூட ஆறுதல் அடைய வழியுண்டு. இவ்வுலகிலிருந்து நம்மை விட்டு பிரிந்து போனவர்களினிமித்தமாகவும் நாம் ஆறுதல் பெறமுடியும். இங்கிருந்து போனவர்களுக்கு அது நன்மையாக மாறிப் போயிற்று. அதனால் நாமும் மகிழ்ச்சியடைலாம். கிறிஸ்துவுக்குள்ளாக மரித்துப் போனவர்கள் ஒருபோதும் அழிந்து போவதில்லை என்கிற தைரியத்தைக் காட்டிலும் சிறந்த ஆறுதல் வேறு எதுவுமில்லை. அவர்கள் உயிர் துறக்கவில்லை. அதற்கு பதிலாக முழுமையான ஜீவனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் சகல துயரங்களிலிருந்தும் நீங்கி, நமது கற்பனைக்கும் எட்டாததான அளப்பரிய ஆனந்தத்தை அங்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். துயரத்தில் இருக்கிறவர்களே! முத்துக்கள் பதிக்கப்பட்ட பரலோகத்தின் வாசலை நோக்கிப் பார்த்து உங்கள் இருதயங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். தங்கள் மீட்பரின் சிங்காசனத்தண்டையில் எப்பொழுதும் சூழ்ந்திருக்கின்றவர்களைப் பார்த்து ஆறுதல் அடையுங்கள்.


பரலோகத்தைப் பற்றி அதிகமாக நினைப்பதால், அது நமது ஜாக்கிரதை உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை நான் அதை இழந்து போய்விடுவேனோ? அதை இழந்து போகாதபடிக்கு நான் என்ன செய்ய வேண்டும்? பரலோகம் ஒரு சாதாரண விஷயமாக இருந்தால். நான் அதை அடையாமல் போனாலும் அதனால் பெரிய இழப்பில்லை. அதைக் குறித்து நாம் அறிந்திருப்பது அதன் உண்மை நிலையில் பாதிகூட இல்லை. ஆனால் கொஞ்சம் அறிந்திருப்பதே இவ்வளவு மகிழ்ச்சிகரமாகத் தென்படுமானால். அதை அடைந்தே தீரவேண்டும் என்கிற உறுதியோடு நமது அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு தேவன்தாமே நமக்கு ஊக்கத்தை அருளிச் செய்வாராக. எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்காமல் வழியிலேயே மரித்துப் போனதுபோல நாமும் ஆகிவிடாமல், அந்தப் பரம இளைப்பாறுதலில் பிரவேசிக்கப் போவதை நிச்சயப்படுத்திக் கொள்வோமாக. இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, கடவுளுடைய ஜனங்கள் அடையப்போகிற பரமஇளைப்பாறுதலைக் குறித்து அடிக்கடி தியானிப்பதைக் காட்டிலும் அதிக நன்மை தரக்கூடிய தியானங்கள் வேறு எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். ஆகவே, உங்களுடைய சிந்தனைகளை மேல்நோக்கி, அந்த பொன்னான வீதிகளின் பக்கமாக சற்றுத் திருப்புங்கள் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.


நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வசனத்திலுள்ள (அ)பரிசுத்தவான்களின் பேரானந்தத்தைக் குறித்து முதலாவதாக தியானிப்போம். (ஆ)அந்த பாக்கியத்தை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைக் குறித்து அடுத்தபடியாகப் பார்ப்போம். (இ)கடைசியாக, அதன் மூலமாக நாம் என்ன பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் பார்க்கலாம்.


அ) பரிசுத்தவான்கள் அடைந்துள்ள பேரானந்தம்|


அவர்கள் அடைந்துள்ள பேரானந்தத்தின் முழுநிலைமையும் இங்கே நமக்கு அறிவிக்கப்படவில்லை. சில விஷயங்களிலிருந்து அவர்கள் பெற்றுள்ள விடுதலையைக் குறித்து இந்த வசனம் நமக்கு அறிவிக்கிறது. இரண்டு மூன்று அசௌகரியமான விஷயங்களிலிருந்து அவர்கள் பெற்றுள்ள விடுதலையை இவ்வசனம் குறிப்பிடுகிறது. முதலாவதாக நமக்குள்ளேயே இருக்கின்றதான சில அசௌகரியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இவர்கள் இனி பசியடைவதுமில்லை. இனி தாகமடைவதுமில்லை". அதாவது இவர்கள் தங்களுக்குள்ளிருந்து புறப்படுகின்ற அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக அவர்களுக்கு வெளியிலிருந்து வருகின்றதான அசௌகரியங்கள் "வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை ஒரு வசனத்தில் ஆவிக்குரிய கருத்தை காண வேண்டுமென்பதற்காக. அது இயல்பாகவும் வெளிப்படையாகவும் கூறுகின்ற கருத்துக்களை விலக்கி விட்டு, வேறு அர்த்தம் கண்டுபிடிக்க நாம் சிரமப்பட வேண்டியதில்லை. ஆகவே முதலில் இதில் எளிமையாக காணப்படுகின்ற கருத்தை நாம் எடுத்துக் கொள்வோம். பரலோகத்தில் அவர்களுக்கு ஒரு மகிமையான சரீரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பரலோகத்தில் உணவு, நீர் இவைகளுக்குத் தேவை இருக்குமா என்பதைக் குறித்து நமக்கு வசனம் கூறவில்லை. ஆகவே அதைக் குறித்து நாம் பேசப்போவதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு உணவுத் தேவை இருக்குமானால் அது சந்திக்கப்படும் என்பதை வசனம் நமக்கு கூறுகிறது - சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து. இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்". எதிர்காலத்தில் என்ன தேவைகள் ஏற்பட்டாலும் அதைக் குறித்து கலக்கம் கொள்ள வேண்டிய நிலமை அவர்களுக்கு இல்லை. இங்கே, இவ்வுலகத்திலே, பசியுள்ள ஒரு மனிதன், "நான் எதை சாப்பிடுவது?" என அங்கலாய்க்க வேண்டியதாயிருக்கிறது. தாகமுள்ளவனும் "நான் என்னத்தைக் குடிப்பேன்"? எனத் தேடுகிறான். நாம் அனைவருமே, "எதை உடுத்துவது?" என கவலை கொள்கிறவர்களாயிருக்கிறோம். ஆனால் மறுஉலகத்திலோ இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இடமேயில்லை. அவர்களுக்கு வேண்டியவைகள் எல்லாம் அங்கு தாராளமாக கிடைக்கும். கடவுளுடைய ஜனங்கள்கூட இவ்வுலகில் பட்டினியை அனுபவிக்கிறார்கள். கடவுளின் ஒரே பேறான குமாரன். சகலத்திற்கும் அதிகாரியானவர்கூட, இங்கே பசியாயிருந்தார். இந்தவிதமான பாடுகளில் ஒருவன் கிறிஸ்துவோடு பங்குபெற வேண்டியவனாக இங்கு இருந்தால் அதைக் குறித்து அவன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடவுளின் மக்கள் இங்கே தாகமாயிருக்க வேண்டியதாயிருக்கிறது அவர்களுடைய ஆண்டவரும் "தாகமாயிருக்கிறேன்” என்றாரே. அவர் அனுபவித்த பாடுகளில் எதையேனும் நீங்களும் அனுபவிக்க நேர்ந்தால், கடவுளின் ஜனமாகிய நீங்கள் அதைக் குறித்து ஆச்சரியம் கொள்ளாதீர்கள். பரலோகத்திலே அவரைப் போலவே இருக்கப் போகிற ஜனங்கள் பூலோகத்திலேயும் தமது தலைவரைப் போலவே இருக்க வேண்டுமல்லவா? ஆனால், பரலோகத்திலோ தரித்திரம் இல்லை. வேதனையான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய விபத்துக்கள் இல்லை. “இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை. தாகமடைவதுமில்லை”.


சரீரசம்பந்தமான இந்தக் காரியங்களை நாம் ஆராய்ந்து


பார்த்ததையும் தவிர்த்து, இதை மனது சம்பந்தமாகவும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. நமது மனதும் ஓயாமல் பசிக்கும் தாகத்துக்கும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் பலவிதமான பசிகளும் தாகங்களும் காணப்படுகின்றன. அவைகளில் சில தீமையானவை. சில தீங்கில்லாதவை. உலகில் அநேக மனிதர்கள் சொத்துக்களின் மீது தீராத பசியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். பொருளாசை உடையவனை ஒருபோதும் திருப்திப்படும்-. தா, தா" என்கிறதான அட்டையை ஒருபோதும் திருப்தி 10 / 128து இம்மாதிரியான பசி பரலோகத்தில் ஒரு போதும் இரு வும் முடியாது. ஏனென்றால் அங்கு சகலமும் பரிபூரணமாக நிறைந்து காணப்படுவதால் இவ்வித தேவை எழ வாய்ப்பில்லை. தேவனுடைய சிங்காசனத்துக்கு அருகாமையில் இருந்து, அவருடைய மகிமையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தின் அளவற்ற நிலைமையில் அவர்களுக்கு வேறு எந்தவிதமான தேவைகளும் இருக்கப் போவதில்லை. தங்களுக்குத் தேவை என அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே அங்கு அவர்களுக்குப் பரிபூரணமாக கிடைத்திருக்கும். அவர்களுடைய பொக்கிஷங்களுக்குக் குறைவேயிராது. அவர்கள் விரும்புகின்ற பொக்கிஷம் எதுவும் அவர்களுக்கு மறுக்கப்படுவதில்லை. இவ்வுலகிலே பல மனிதர்கள் புகழின் மீது பசிதாகமுடையவர்களாயிருக்கிறார்கள். தாங்கள் விரும்புகின்ற புகழை அடைந்துகொள்ள அவர்கள் எவ்வளவாகப் பாடுபடுகிறார்கள்! தங்களுக்குத் தடையாக வருகின்ற யாவற்றையும் உடைத்து நொறுக்கி அதை அடைந்து கொள்ளுகிறார்கள். தங்களுடைய குறிக்கோளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்கிறார்கள். புகழை அடைவதற்காக சாகவும் துணிகிறார்கள். ஆனால் பரலோகத்தில் இந்தவிதமான பசிதாகங்களுக்கு இடமில்லை. ஒருகாலத்தில் புகழை அடைவதற்காக மிகவும் ஆசைப்பட்டவர்கள்கூட இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டபின் தங்களுடைய ஆசைகளை அற்பமானதாக எண்ணுகிறார்கள். அவர்களுடைய அற்ப ஆசைகளுக்கு பரலோகத்தில் என்ன இடமிருக்கப் போகிறது? தங்களுடைய கிரீடங்களை அவர்கள் கழற்றி, தங்களை மீட்ட இரட்சகருடைய பாதத்தில் வைத்துவிடுவார்கள். பரலோகத்தில் அவர்கள் தங்களுடைய வெற்றிக் கொடியை சுமந்து செல்வார்கள். ஆனால் அந்த வெற்றிக்கு ஆட்டுக்குட்டியானவரும். அவரது மரணமும்தான் காரணம் என்பதை அறிவித்துக் கொண்டே செல்வார்கள், ஆட்டுக்குட்டியானவருக்குக் கிடைக்கும் புகழில் அவர்களுடைய ஆத்துமா மகிழ்ந்திருக்கும். ஆட்டுக்குட்டியானவர் அடையும் கீர்த்தியினால் அவர்களுடைய ஆவியானது நித்தியத்துக்கும் மனதிருப்தியடைந்திருக்கும் புகழைவேண்டிஅவர்கள் இனி ஒருபோதும் பசியோ தாகமோ அடையமாட்டார்கள். இன்னொரு வகையான பசிதாகம். அன்பை நாடி நிற்பது! அன்பு செலுத்தவும். அன்பைப் பெறவும் மனித இதயமானது எப்போதும் தாகத்துடன் இருக்கிறது. "காதல்" என்று தற்போது வழங்கி வருகிறதான அன்பைக் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை. தோழமையையும் நேசத்தையும் விரும்பி நாடுகின்றதான உணர்வைக் குறித்து சொல்லுகிே 'வ நாடிப் பற்றிக் கொள்வதற்கு மனித மனது நாம் அப்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியாதைதான் வாழுகின்றோம். மனிதர்கள் சேர்ந்துதான் வாழவேண்டும். நாம் தனித்திருக்க முடியாது. தன்னுடைய மனதின் துயரங்களை யாராவது. கேட்க மாட்டார்களா என அநேகருடைய மனது தேடித் திரிகிறது. தங்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்கு கருணையுள்ள ஆள் இல்லாததால் அநேக மனிதர் புத்திசுவாதீனமற்றவர்களாகக்கூட ஆகிவிடுகிறார்கள். சங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக யாரேனும் இருப்பார்களா எனத் தேடி அலைகின்ற பசிதாகமுடைய ஆத்துமாக்கள்தான் எத்தனை ஏராளம்| ஆனால் இந்தவிதமான பசியும்தாகமும் மேலோகத்தில் அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய நேசம் முழுவதும் தங்களுடைய மீட்பரை மட்டுமே நோக்கியதாக இருக்கும். பூலோகத்தில் வாழும்போது அவர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையானது பரலோகத்திலும் தொடர்ந்து நிலைத்திருக்கும். அவரே அவர்களுடைய இருதயத்தின் ஆண்டவர். மனதை ஆளுபவர். அவரில் அவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். ஒருபோதும் அன்பைத் தேடி அலையும் பசிதாகமுடையவர்களாகக் காணப்படமாட்டார்கள்.


அறிவை அடையும்படிக்கு பசியோடும் தாகத்தோடும் தேடி அலைகிற இளம்பிராயத்தினர் எத்தனை போ! பூலோகத்தின் கடந்த காலத்து சரித்திரங்களை அறிந்து கொள்வத றகாக எவ்வளவாக முயற்சிக்கிறார்கள்! தத்துவசாஸ்திரத்தை ஆராய்ந்து அதில் கரை கான முயற்சிப்பவர்கள் எவ்வளவு போ! அறிவு! அறிவு! அறிவு! மனித மனது அறிவை அடையும்படி வாஞ்சித்து அலைகிறது. ஆனால், மேலோகத்திலோ அவாகள் இருக்கிரவண்ணமாகவே அறிந்து கொள்வார்கள் .  மேலோகத்தில் அவர்கள் எல்லாவற்றையும் அறிகின்றதான சந்தோஷத்தோடு கடவுளுக்கு ஒப்புவித்துவிட ஆவலாயிருக்கிறேன். பரிசுத்தத்தின்மேல் பசிதாகமுடையவர்களாயிருப்பவர்கள் இப்படியாக சகலத்தையும் விட்டுவிட மனதாயிருப்பார்கள்.


சந்தோஷத்தோடு கடவுளுக்கு ஒப்புவித்துவிட ஆவலாயிருக்கிறேன். பரிசுத்தத்தின்மேல் பசிதாகமுடையவர்களாயிருப்பவர்கள் ஆனால், பரலோகத்திலோ இந்தவிதமான பசிதாகம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் தங்கள் பிதாவின் சிங்காசனத்துக்கு முன்பாக குற்றமற்றவர்களாக காணப்படுவதினால்தான். இதை நினைக்கும்போதே இனிமையாக இருக்கிறதல்லவா? பரிபூர காணப்படுவதே பரலோகத்தின் இயல்பாக இருக் 13/128 வேராகிலும், கிளையாகிலும் எதுவும் அங்கே காணப்படுவதில்லை. நம் சரீரத்திலும் ஓர் இம்மியளவு பாவம்கூட தென்படாது. கறைதிரை முதலானவை ஒன்றுமில்லாமல் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டவர்களாக அங்கு காணப்படுவோம். நமது ஆண்டவரைப் போலவே முற்றிலும் பரிசுத்தமுள்ளவர்களாக இருப்போம். இவ்வுலகத்திலே நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருப்பது ன்மையான காரியம்தான். இரட்சிப்பின் நிச்சயத்தை அடைவதில் அநேகர் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையோடிருக்கும் அவர்கள் அதற்கான நிச்சயத்தைப் பெற்றுக் கொள்வதில் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். ஆனால், இவ்வுலகத்தைக் கடந்து அக்கரை சேர்ந்தபின் "நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?" என்கிற பசிதாகம் அவர்களில் காணப்படாது. அங்கே தமது இரட்சகரை அவர்கள் முகமுகமாக தரிசித்திருப்பார்கள். அவரைத் தேடி அலைகிறவர்களாக இருக்க மாட்டார்கள். அவருடைய அன்பின் கடலிலே மூழ்கித் திளைத்திருப்பார்கள். இடைவிடாமல் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிற அவர்களுக்குள் சந்தேகத்தின் கேள்விகள் எழாது. பூலோகத்திலே இயேசுக்கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதற்கு விசுவாசிகள் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். ஒரு கனப்பொழுதாகிலும் அவர் தமது முகத்தை நமக்கு மறைத்துக் கொண்டால், என் ஆத்துமா இராக்காலங்களில் உம்மை வாஞ்சிக்கிறது" என கலங்கித் தவித்துப் போகிறோம். பரிசுத்தஆவியினால், தேவனுடைய அன்பை நமது உள்ளங்களில் திரும்ப அனுபவிக்கும் வரை நாம் திருப்தியடைவதில்லை. ஆனால் பரலோகத்தின் நிலமை அப்படியில்லை. அங்கே மேய்ப்பர் எப்போதும் தம் மந்தையோடே இருக்கிறார். மேலோகத்தின் ராஜா எப்போதும் தமது பிரஜைகளோடு இருக்கிறார். அவருடைய இடைவிடாத பிரசன்னத்தினால் அவரைத் தேடி அலைகிறதான பசிதாகம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுப் போகிறது. இருதயமானது முற்றிலுமாக பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டபடியால்.


உள்ளுக்குள்ளிருந்து வருகின்ற உணர்வுகள் தூய்மையாக இருக்கிறது ஆகவே. அவைகள் விசுவாசிகளுக்கு பேரானந்தத்தை அளிப்பதாகவே இருக்கிறது. 


நமக்கு வெளியிலிருந்து வரக்கூடிய தீங்குகளைக் குறித்து இப்போது சற்று சிந்திப்போம். நாம் பாலஸ்தீனா போன்ற தேசத்திலே, பயங்கரமான வெயிலின் உஷ்ணத்திலே வசித்துக் கொண்டிருக்கிறவர்களாக இருந்தால். *வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை" என்கிற வாக்கைக் குறித்து மிகவும் ஆனந்தப்படுகிறவர்களாக இருப்போம். இதன் உள்ளான அர்த்தம் என்னவெனில் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள், வெளியிலிருந்து வருகின்ற எந்தத் தீமையினாலும் பாதிப்படையமாட்டார்கள்என்பதே அதைஅப்படியேஉள்ளபடி எடுத்துக் கொள்ளுங்கள். மகிமையடைந்த பரிசுத்தவான்களை பரலோகத்திலே இருக்கின்ற எந்த காரியமும் அசௌகரியத்துக்கு ஆளாக்காது. பரிசுத்தவான்கள் முற்றிலுமாக மகிமை அடைந்திருக்கிறபடியால் எதுவும் அவர்களை பாதிக்காது என நாம் எண்ண வேண்டும். பூலோகத்திலே சூரியன் மாத்திரமல்லாது பலவிதமான கஷ்டங்களும் துயரங்களும் நம்மைத் தகிக்கிறது. பரிசுத்தவான்கள் என்னவிதமான பாடுகளையெல்லாம் இங்கு கடந்து போயிருக்கிறார்கள்! பலருக்கு சரீரத்தில் பலவிதமான உபாதைகள் இருந்திருக்கிறது. இடைவிடாத நோயினால் தொந்தரவுகள்! அநேக பரிசுத்தவான்கள் இவ்வுலகில் சிறிது காலமாவது சரீரப் பாடுகள் இல்லாமல் ஓய்ந்திருக்க முடிந்ததில்லை. தேவனுடைய பிள்ளைகளில் இன்னும் பலர் வேறுவிதமான பாடுகளோடு ஓயாமல் போராடியிருக்கிறார்கள். ஏழ்மையினால் துன்புற்றிருந்திருக்கிறார்கள் பலர் கடுமையாக பாடுபட்டு உழைக்க வேண்டியதாக இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு பற்றாக் குறையான ஆகாரமும். நைந்து கிழிந்துபோன உடைகளுமே இருக்கும்படியான துன்பங்களுக்குள்ளாக கடந்துபோகும்படி தேவன் குறித்திருந்தார். குழந்தைப் பருவத்திலே ஏழ்மையை அனுபவித்தவர்களின் துயரமானது கடும் உஷ்ணமாக அவர்களைத் தகித்தது. இன்னும் சில விசுவாசிகள் தங்களுக்கு அருமையானவர்களை அடுத்தடுத்து பறிகொடுத்த துயரத்துக்குள்ளாகியிருந்தார்கள். ஓ விதவைகளின் நிலமை எவ்வளவு துயரமானது! தகப்பனில்லாத பிள்ளைகளின் துயரம் எவ்வளவு ஆழமானது! பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரின் துக்கம் எவ்வளவு பெரிது! சிலவேளைகளில் தேவனுடைய அம்பானது அடுத்தடுத்து நம் மீது பாய்ந்து துயரத்தை ஏற்படுத்துகிறதோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மேலும் ஏதாவது பாக்கி இருக்கக் கூடுமோ என நினைக்கும்படியாக துன்பங்கள் தொடருகிறது. இதெல்லாம் இவ்வுலகில் நாம் சந்திக்கிற பிரச்சனைகளின் உஷ்ணத் தாக்கங்கள். சில. பிள்ளைகள் நன்றிகெட்டத்தனமாக நடந்து பெற்றோரை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். இறந்து போன பிள்ளைகளினால் ஏற்படும் துயரத்தைக் காட்டிலும் பக்தியற்ற பிள்ளைகளால் ஏற்படும் துயரம்தான் பெற்றோருக்கு மிகவும் அதிகமாக இருக்கும் என நான் கருதுகிறேன். முடிந்து போன சிலுவையைக் காட்டிலும் சுமந்து கொண்டிருக்கிற சிலுவைதான் அதிக பாரமானது. பெற்றோருக்கு அவமானத்தைக் கொண்டுவரும் வகையில் வாழுகின்ற பிள்ளைகளினால் பெற்றோர் அடைகிற துயரம்தான் எவ்வளவு பெரியது! இவன் பிறந்தபோதே இறந்து போயிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும் என்று பெற்ற தாயையே எண்ண வைக்கிற விதத்தில் வாழுகின்ற பிள்ளையால் ஏற்படுகின்ற துக்கம் மகா கொடியது. இந்தவிதமான துக்கங்களையெல்லாம் நீங்கள் சீக்கிரமாகக் கடந்து போய்விடுவீர்கள். "வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை". அங்கு ஏழ்மை இல்லை. வியாதி இல்லை, இறப்பு இல்லை, நன்றிகெட்டதனம் இல்லை - இவை போன்ற தீமை எதுவும் அங்கே இல்லை. தங்கள் துயரத்திலிருந்து அவர்கள் நித்தியத்துக்கும் ஓய்ந்திருப்பார்கள்.


இன்னும் வேறுவிதமான உஷ்ணங்களையும் நாம் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது சோதனைகளின் வடிவத்தில் வருகிறது. ஓ கடவுளுடைய ஜனங்களுக்கு சரீரத்தில் வந்த சோதனைகள் எவ்வளவாய் இருக்கிறது! தேவன் மாத்திரம் தமது மிகுந்த கிருபையினால் குறுக்கிட்டு அநேகந்தரம் அவர்களை சோதனைகளுக்கு விலக்கியிராவிட்டால் அதினால் பிடிக்கப்பட்டுப் போயிருப்பார்களே! அவர்களும் சோதிக்கப்பட்டார்கள். சிலவேளைகளில் அவர்கள் குடும்பத்தாரே அவர்களுக்கு விரோதியாக இருந்திருக்கிறார்கள். பலவிதமான சூழ்நிலைகளினால் சோதனைக்குட்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தடுமாறி விழக்கூடிய நிலமைக்குப் போயிருக்கிறார்கள். பிசாசினாலும் அவர்கள் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாத்தானின் மறைமுகமான சோதனைகளுக்குத் தப்பிப்பது கடினம். அவன் தனது பொல்லாத விஷ அம்புகளை எய்யும்போது அது விசுவாசியை பயங்கரமாகத் தாக்கும். ஓ! இவ்விதமான பயங்கரத் தக்குதல்களை சமாளித்த நம்மில் பலர், இவ்வுலகைக் கடந்து அக்கரைக்கு சென்றபின் எப்படியாக நிம்மதிப் பெருமூச்சு விடுவோம்! பூலோகத்திலே நம்மைத் தாக்கின அந்த நாயானது. நம்மைப் பார்த்துக் குரைக்கக்கூட இயலாமல் நரகத்தின் அக்கினியிலே கிடப்பதைக் கண்டு நகைப்போமல்லவா? அவனிடமிருந்து நாம் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டிருப்போம். இங் அவன் நம்மைப் பட்சித்துப் போட வகை தேடிக்செ நாம் கவலையோடிருக்கிறோம். ஆனால், நம்மைப் பட்சிக்க முடியாது. ஆகவே அங்கு நாம் கவலையற்றிருப்போட சோதனையாகிய "வெயிலாகிலும் உஷ்ணமாகிலும் அங்கு நம் மேல் படுவதில்லை. சோதனைகளை அனுபவித்து வந்த ஜனங்கள் அங்கு மிகவும் சந்தோஷத்தோடு இருப்பார்கள்.


உபத்திரவமென்னும் உஷ்ணமும் அநேகபரிசுத்தவான்களைத் தகித்து வந்திருக்கிறது. கடவுளுடைய ஜனங்கள் இந்தவிதமான சோதனைக்குள்ளும் உட்படுத்தப்படுகிறார்கள். அநேக பாடுகளின் வழியாக நடந்து வந்து அவர்கள் பரலோகராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தவான்களின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறவர்கள் யாரும் பரலோகத்தில் இல்லை. குற்றஞ் சுமத்துகிறவர்கள் இல்லை. திரும்பவும் துன்பப்படும்படியாக அவர்கள் அங்கு உபத்திரவங்களை சந்திப்பதில்லை. எதைக் குறித்தும் கவலைப்படுகின்ற உஷ்ணமும் அவர்களை அங்கு தகிப்பதில்லை. இவ்வுலகிலேகூட நாம் கவலைப்பட வேண்டியது அவசியமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடவுளுடைய ஜனங்களில் அநேகர் பலவிதமான கவலைகளுக்குள்ளாகி அதனால் பாதிப்படைந்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று இக்கூட்டத்தில் அமர்ந்து, *பரலோகத்தில் இருப்பது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்!" எனப் பாடினவர்களில் சிலபேரின் எண்ணமெல்லாம் தங்களுடைய வியாபாரத்தைக்குறித்தும், வீட்டைக்குறித்தும்கவலையோடிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே நாங்கள் பரலோகத்தைக் குறித்துப் பிரசங்கித்து உங்கள் கவனத்தை மேல்நோக்கித் திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில்கூட. சில குடும்பப் பெண்களின் கவனமானது வீட்டுக் காரியங்களில் செய்ய மறந்தவைகளைக் குறித்தோ அல்லது சாவியை எங்கே வைத்தோம் என்பதைக் குறித்தோ அலைபாய்ந்து கொண்டிருக்கலாம். கவலைப்படுவதற்கு நாம் பல காரணங்களைக் காட்டிக் கொண்டு புதிது புதிதான கவலைகளை தொடர்ந்து கண்டுபிடிக்கிறவர்களாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் நாம் ஒரு வசனத்தை மறந்துவிடுகிறோம் -அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விடுங்கள்" மோட்சத்திலோ கவலைக்கே இடமில்லை. இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை. இனித் தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை" ஓ மனிதர்களே. அங்கு கடலில் செல்லுகிற வியாபாரக் கப்பல்கள் இல்லை. அறுப்பும் விதைப்பும் இல்லை. வெயிலையோ மழையையோ குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஓ பெண்ணே. அங்கு நீ கவலைப்பட்டு பராமரிக்க வேண்டிய குழந்தைகள் எதுவுமில்லை. பிள்ளையின் வியாதியினிமித்தமாக நீ அங்கலாய்க்க வேண்டிய நிலமையில்லை. ஒருபோதும் பிரிந்து போகாத ஒரு பெரிய குடும்பத்திலே நீயும் அங்கத்தினளாக இருப்பாய். கடவுளுடைய குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நாம் அங்கே நிரந்தரமாக சேர் நித்திய காலத்துக்கும் ஆசீர்வதிக்கப்படவர்களாய் அனுபவித்திருப்போம்.


Post a Comment

0 Comments